ஆன்மிகம்
திருச்செந்தூர் அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் அமலிநகர் புதுமை புனிதர் அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அமலிநகர் புதுமை புனிதர் அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு ஆலயத்தில் இருந்து கொடிபவனி புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பின்னர் தூத்துக்குடி பங்குதந்தை பெஞ்சமின் டி சூசா திருவிழா கொடியேற்றி மறையுரையாற்றினார். இதில் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நவ நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலி, மதியம் 12 மணிக்கு ஜெபமாலை, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
வருகிற 30-ந்தேதி மாலையில், புனிதரின் சப்பர பவனியும், தொடர்ந்து பங்குதந்தை அமலதாஸ் தலைமையில் மாலை ஆராதனையும் நடக்கிறது. அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலி, 7.30 மணிக்கு குரு செல்வராசு தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது.
நவ நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலி, மதியம் 12 மணிக்கு ஜெபமாலை, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
வருகிற 30-ந்தேதி மாலையில், புனிதரின் சப்பர பவனியும், தொடர்ந்து பங்குதந்தை அமலதாஸ் தலைமையில் மாலை ஆராதனையும் நடக்கிறது. அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலி, 7.30 மணிக்கு குரு செல்வராசு தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது.