ஆன்மிகம்
ஆலய திருவிழாவில் தேர்பவனி நடைபெற்றதையும், அதில் ஏராளமான பங்குமக்கள் கலந்துகொண்டதையும் படத்தில் காணலாம்.

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேர்பவனி

Published On 2018-06-14 02:35 GMT   |   Update On 2018-06-14 02:35 GMT
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் காலை நவநாள் திருப்பலி, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது.

9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. 10-ம் திருவிழாவான நேற்று காலை 5 மணிக்கு செட்டிவிளை பங்குதந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் கூட்டுத்திருப்பலியும், 7 மணிக்கு அழகப்பபுரம் அருட்பணியாளர்கள் கலந்துகொண்ட திருப்பலியும் நடந்தது.

பிற்பகல் 2.30 மணிக்கு 4 ரத வீதிகள் வழியாக தேர்பவனியும், இரவு 8.30 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீரும் நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன் பால்ராஜ், அருட்பணியாளர் சூசைமணி, பங்குபேரவை துணைத்தலைவர் சேவியர் மணி, செயலாளர் பாண்டியன், இணை செயலாளர் கீவன் மேரி, பொருளாளர் செல்லத்துரை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News