ஆன்மிகம்
கயத்தாறு அருகே கிறிஸ்தவ ஆலய சப்பர பவனி

கயத்தாறு அருகே கிறிஸ்தவ ஆலய சப்பர பவனி

Published On 2021-08-12 04:00 GMT   |   Update On 2021-08-12 04:00 GMT
கயத்தாறு அருகே கம்மாப்பட்டி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. மாலையில் சப்பர பவனி தொடங்கியது.
கயத்தாறு அருகே கம்மாப்பட்டி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழா கூட்டு திருப்பலியுடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர், புனித மிக்கேல் அதிதூதர் சொரூபத் துக்கு மாலை அணிவித்து வணங்கி சப்பர பவனியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கயத்தாறு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வினோபாஜி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், சிறுபான்மை பிரிவு பிரான்சிஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News