ஆன்மிகம்
கும்பகோணம் அருகே புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா
கும்பகோணம் அருகே நால்ரோடு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக கொடியிறக்கப்பட்டது. இதில் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே நால்ரோடு புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி உதவி பங்குத்தந்தை மனோஜ் திருப்பலி மற்றும் மறையுரை வழங்கினார். குடந்தை மறைமாவட்ட ஆயர் திருப்பலியை நிறைவேற்றினார்.
அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று கொடியிறக்கப்பட்டது. அப்போது பூண்டி மாதா தியான மைய இயக்குனர் சாம்சன், திருவண்ணாமலை பங்குத்தந்தை பீட்டர் ஜூலியன் ஆகியோர் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று கொடியிறக்கப்பட்டது. அப்போது பூண்டி மாதா தியான மைய இயக்குனர் சாம்சன், திருவண்ணாமலை பங்குத்தந்தை பீட்டர் ஜூலியன் ஆகியோர் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.