ஆன்மிகம்

திட்டுவிளை தூயமிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

Published On 2019-05-18 03:20 GMT   |   Update On 2019-05-18 03:20 GMT
திட்டுவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
திட்டுவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. அருட்பணியாளர் செல்வன் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் திவ்வியன் மறையுரையாற்றினார்.

இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8 மணிக்கு அன்பின் விருந்தும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலி அருட்பணியாளர் பென்சிகர் தலைமையில் நடக்கிறது. எட்மண்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு அலங்கார சப்பர பவனி நடக்கிறது.
Tags:    

Similar News