ஆன்மிகம்

புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

Published On 2019-05-03 09:05 IST   |   Update On 2019-05-03 09:05:00 IST
பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை திருப்பலியும், மாலை மறையுரை நற்கருணை ஆசியும் நடந்தது.

நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனையும் தேர் பவனியும் நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு பாடல் திருப்பலியும், தேர்பவனியும் நடந்தது.

இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குகுரு நெல்சன்ராஜ் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

Similar News