ஆன்மிகம்

புனித ஆக்னேஷ் அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி

Published On 2019-05-02 03:50 GMT   |   Update On 2019-05-02 03:50 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஷ் அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த புனித ஆக்னேஷ் அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனையும், கூட்டு திருப்பலி நிகழ்ச்சியும் நடந்து வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்ததும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித ஆக்னேஷ் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. கோட்டைமேடு ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய பவனியானது கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

இதில் கோட்டைமேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News