ஆன்மிகம்

இருதயபுரம் புனித ஆக்னேஷ் அன்னை ஆலய தேர்பவனி

Published On 2019-03-02 03:05 GMT   |   Update On 2019-03-02 03:05 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள புனித ஆக்னேஷ் அன்னை ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இருதயபுரம் கிராமத்தில் புனித ஆக்னேஷ் அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா நடைபெற்று, ஆடம்பர தேர்பவனி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னேஷ் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.

பின்னர் பங்கு தந்தை ஜெயராஜ் தலைமையில் தேர்பவனி நடைபெற்றது. தேர் பவனியானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News