ஆன்மிகம்

காட்கோபர் காமராஜ் நகரில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

Published On 2019-01-28 08:27 IST   |   Update On 2019-01-28 08:27:00 IST
மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 27-ம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது.
மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 27-ம் ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் 20-ந்தேதி புனித செபஸ்தியார் திருவிழா நடந்தது.

நேற்று முன்தினம் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது. உதவி பங்குதந்தை வெர்னன் அகுயார், ஏசுராஜ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து சமபந்தி விருந்து நடந்தது. இரவு புனித அந்தோணியாரின் மின் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News