ஆன்மிகம்

தேவசகாயம் மவுண்டில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை உயிர் தியாக விழா

Published On 2019-01-12 03:17 GMT   |   Update On 2019-01-12 03:17 GMT
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் உள்ள மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை உயிர் தியாக விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் தூய வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆலயம் என இரட்டை திருத்தலம் உள்ளது. இங்குள்ள மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை உயிர் தியாக விழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

இன்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு கொடிவலம், ஜெபமாலை, இரவு 7 மணிக்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்டணி தலைமை தாங்கி மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை திருவிழா கொடியேற்றுகிறார்.

13-ந்தேதி காலை திருப்பலி, மாலை ஆராதனை, 14-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு மலைவலம், நண்பகல் 12 மணிக்கு அன்பு விருந்து மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு ராஜாவூர் பங்குதந்தை தால்ப் கிராண்ட்மதன் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். ஆன்டனி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு சப்பரபவனி நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் பங்குதந்தை, பங்கு பேரவையினர், பங்குமக்கள், அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News