காமன்வெல்த்-2022

காமன்வெல்த் விளையாட்டு போட்டி- இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா

Published On 2022-07-30 13:25 GMT   |   Update On 2022-07-30 13:25 GMT
  • 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • 61 கிலோ எடைப்பிரிவில் 269 எடையை தூக்கி மூன்றாவது இடத்தை இந்தியாவின் குருராஜா பிடித்துள்ளார்.

பர்மிங்காம்:

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் 248 கிலோ (113கி +135கி ) எடை தூக்கி 2ம் இடம்பிடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.

மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இந்நிலையில், காமல்வெல்த் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெண்கலப் பதக்கம் வெற்றுள்ளார்.

61 கிலோ எடைப்பிரிவில் 269 எடையை தூக்கி மூன்றாவது இடத்தை இந்தியாவின் குருராஜா பிடித்துள்ளார்.

இதன்மூலம், இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது.

Tags:    

Similar News