சினிமா
டி.சுரேஷ்குமார் இயக்கத்தில் அன்சன்பால், ரேபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மழையில் நனைகிறேன்’ படத்தின் முன்னோட்டம்.
டி.சுரேஷ்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மழையில் நனைகிறேன்’. இதில் அன்சன்பால், ரேபா மோனிகா ஜான் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்துள்ளனர். ‘சங்கர்குரு’ ராஜா, மாத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் இருக்கிறார்கள். ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் டி.சுரேஷ்குமார் கூறியதாவது: “ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் கொட்டும் மழையில் சந்திக்கிறார்கள். இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இது ஒன்று போதாதா? 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காதல் ஜோடி எதிர்ப்புகளைச் சமாளித்து கொட்டும் மழையில் ஒன்று சேர்கிறார்கள்” என்பது தான் கதை.
படத்தின் உச்சகட்ட காட்சியை யாராலும் யூகிக்க முடியாது. அப்படி ஒரு கனமான ‘கிளைமாக்ஸ்’ இடம்பெறுகிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி, அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்”.