சினிமா
வாய்ப்பு கிடைக்காமல் புலம்பும் நடிகை
பிரபல நடிகை ஒருவர் பல ஆட்களை தெரிந்து வைத்தும் பட வாய்ப்பில்லை என்று மற்றவர்களிடம் புலம்பி வருகிறாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், தொடர்ந்து தெலுங்கில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாராம். அதன் பிறகு நடிகைக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்.
ஊரடங்கில் பல நல்ல விஷயங்கள் செய்து வந்தாராம். இதை கவனித்த பலரும் நடிகையை பாராட்டினார்களாம். மகிழ்ச்சி அடைந்த நடிகை தனக்கு வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். இதனால் நடிகையை நல்லது செய்தும் வாய்ப்பில்லை என்று புலம்பி வருகிறாராம். மேலும் நடிகை ரூட்டை மாற்றி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம்.