சினிமா
கொடுக்க மனமில்லாத நடிகை... அதிருப்தியில் ரசிகர்கள்
முன்னணி நடிகை ஒருவர் கொரோனா நிவாரணத்துக்கு எந்தவித உதவியும் செய்யாததால் நடிகை மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.
கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு பிரபல நடிகர்- நடிகைகள் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்துவரும் நிலையில், மூன்றெழுத்து நடிகை மட்டும் எந்த உதவியும் செய்யவில்லையாம். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்களாம்.
‘செல்லப்பிராணிகளிடம் காட்டும் அக்கறையை ஏழை மக்களிடமும் காட்டலாமே’ என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்களாம். இருப்பினும் அந்த நடிகை இதுவரை எந்தவித உதவியும் செய்யாமல் மவுனம் காத்து வருகிறாராம். சமீபத்தில் அந்த நடிகை நடித்த எந்த படமும் ரிலீசாகாததால் அவர் நிதிச்சிக்கலில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம்.