சினிமா
விட்டதை பிடிக்கும் முயற்சியில் நடிகை
தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை, விட்டதை பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
தெலுங்கில் தொப்புள் காண்பித்து பிரபலமான நடிகை, தற்போது அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறாராம். தற்போது ஊரடங்கு நேரத்தில் பேசப்பட்ட சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாம்.
இதனால் ஊரடங்கு முடிந்து நிலைமை சீரானபின் தான் நடிக்க ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம். தன்னை போனில் தொடர்புகொள்ளும் தயாரிப்பாளர்களிடம் ஊரடங்கு முடிந்தபின் சம்பளம் பற்றி பேசிக்கொள்ளலாம் என கூறிவிடுகிறாராம் நடிகை.