சினிமா
பதிவு செய்யாதது ஒரு குற்றமா - புலம்பும் நடிகை
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒரு பதிவு செய்யாதது குற்றமா என்று புலம்பி வருகிறாராம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை, தெலுங்கில் முன்னணி நடிகரின் மகனை திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு நடிகரின் வீட்டாருக்கும் நடிகைக்கும் பிரச்சனை என்று பல செய்திகள் வெளியானதாம். ஆனால் நடிகை இதைப்பற்றி எதுவும் கண்டு கொள்ளவில்லையாம்.
தற்போது சமீபத்தில் நடிகரின் சகோதரருக்கு பிறந்தநாள் வந்ததாம். பலரும் வாழ்த்து சொன்னார்கள் ஆனால், நடிகையோ சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக் கூறி ஒரு பதிவு கூட செய்யவில்லையாம். இதை பலரும் குடும்பத்தில் பிரச்சனை என்று உறுதி செய்து விட்டார்களாம்.
ஆனால் நடிகை ஒரு பதிவு செய்யாதது குற்றமா இதற்கு என்னென்னமோ பேசுகிறார்கள் என்று வருத்தப்படுகிறாராம்.