சினிமா
வாரிசு நடிகரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்களாம்.
கலைக் குடும்பத்தைச் சேர்ந்த வரும் அரசியல் தலைவரின் வாரிசுமான நடிகர், தற்போது படங்களை குறைத்துக்கொண்டு அரசியலில் தீவிர ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.
தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால் வெளியே செல்லாமல் இருக்கும் நடிகர், நடிகர்கள் பலரும் சிரமத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி உள்ளிட்ட உதவிகளை செய்து வருவதை கண்டு, தானும் உதவி செய்யலாம் என்று முடிவுக்கு வந்தாராம்.
ஆனால் நடிகரோ ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே உதவி செய்திருக்கிறாராம். இதை அறிந்த நெட்டிசன்கள் நடிகர் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறார் போல... இவர்களிடம் பணம் இல்லை போல.. அதனால்தான் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறார் என்று கலாய்த்து வருகிறார்களாம்.