சினிமா
நடிகையின் உதவித் தொகையை குறைத்த காதலர்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை வழங்க இருந்த உதவித்தொகையை அவரது காதலன் குறைத்துள்ளாராம்.
கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு நடிகர்- நடிகைகள் உதவி செய்து வருகிறார்கள்.
இயல்பாகவே இரக்க சுபாவம் கொண்ட ஒரு ஐந்தெழுத்து நடிகை, பெரிய தொகையை கொடுக்க முன்வந்தார். அதற்கு அவருடனே வசித்து வரும் காதலர் தடை போட்டு, உதவித்தொகையை பாதியாக குறைத்து விட்டாராம்.
அதற்கு அவர் சொன்ன காரணம்: ‘‘ஒரு நட்சத்திர அப்பா, மகன்களே ரூ.10 லட்சம்தான் கொடுத்து இருக்கிறார்கள். நீ (நடிகை) இவ்வளவு கொடுத்ததே போதும்’’ என்றாராம். ‘‘காதலரின் கட்டளையே சாசனம்’’ என்று அந்த நடிகையும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டாராம்.