சினிமா
காதலரை பிரித்த கொரோனா - வருத்தத்தில் நடிகை
தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தனது காதலனை பிடித்து விட்டதாக நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இயக்குனர் ஒருவரை காதலிக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்களாம். தற்போது பரவிவரும் கொரோனா வைரசால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்களாம்.
ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இவர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா அதிகம் பரவுவதாக அறிந்து இருவரும் பிரிந்து இருக்கிறார்களாம். சமீபத்தில் இவர்கள் 2 பேரும் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம்.