சினிமா
நடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்
முன்னணி நடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே என்று பட அதிபர்கள் குழம்பி வருகிறார்களாம்.
மூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானதாம். ஒருவழியாக சமரசம் பேசி, கதாநாயகன் நடிக்க வந்தாராம். படப்பிடிப்பும் மிக வேகமாக நடைபெற்று வந்ததாம்.
அந்த நடிகர் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டாரே... எப்படி கரெக்டா நடக்குது என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பீதி காரணமாக அந்த படப் பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாம். மறுபடியும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்ற எதிர் பார்ப்புடன் காணப்படுகிறார், தயாரிப்பாளர்.
ஆனால் இவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள், நடிகர் கரெக்டா நடிக்க வந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சு என்று புலம்பி வருகிறார்களாம்.