சினிமா
இனிமேல் நோ படம்... அது மட்டும் தான் - நடிகையின் திடீர் முடிவு
தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்தவர் தற்போது இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.
தமிழில் வீரனாக வந்த படத்தில் விருது பெற்ற பெல் நடிகை, ஒரு சில காரணங்களால் தமிழில் ஓரங்கட்ட பட்டாராம். தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அதிகமாக ஜொலிக்க முடியவில்லையாம். இனிமேல் படமே வேண்டாம் என்று ரியால்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு வந்த நடிகை, இணைய தொடர் ஒன்றில் நடித்தாராம்.
இது பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து விட்டதாம். அதனால், இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன். இணைய தொடரில் மட்டுமே நடிப்பேன் என்று முடிவு செய்து இருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவு எவ்வளவு தூரம் போகும் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.