சினிமா
பயத்தில் விழாவில் கலந்துக் கொண்ட நடிகை
முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், விழா ஒன்றுக்கு பயத்தில் கலந்துக் கொண்டதாக பலரும் பேசி வருகிறார்களாம்.
முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை எப்போதும் தான் நடிக்கும் படங்களின் விழாக்களில் கலந்துக் கொள்வதில்லையாம். படம் ஒப்பந்தம் ஆகும் போதே புரமோஷன்களில் கலந்துக் கொள்ள மாட்டேன் என்று நிபந்தனை போடுவாராம்.
இந்நிலையில் நடிகை ரெய்டு டீம் நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டாராம். இந்த விழாவிற்கு மட்டும் நடிகை சென்றது பலருக்கும் கேள்வியை எழுப்பி இருக்கிறதாம். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பதால் விழாவிற்கு செல்லாவிட்டால், வீட்டுக்கு ரெய்டு வந்துவிடும் என்ற பயத்தில் கலந்துக் கொண்டதாக பலரும் பேசி வருகிறார்களாம்.