சினிமா
விழாவை புறக்கணிக்க நடிகை போட்ட திட்டம்
பிரபல நடிகை ஒருவர், தன்னுடைய படத்தின் விழாவிற்கு போகாமல் இருக்க புதிய திட்டம் போட்டாராம்.
மூன்றெழுத்து பிரபல நாயகி, அவர் நடித்த படவிழாவில் கலந்து கொள்ளாதது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாம். விழாவுக்கு அவர் வராதது ஏன்? என்று கேட்டு தயாரிப்பாளர்கள் கொந்தளித்தார்களாம்.
விழா குறிப்பிட்ட தேதியில் நடைபெறுவது அந்த நடிகைக்கு தெரியுமாம். ஊரில் இருந்தால்தானே விழாவுக்கு போக வேண்டியிருக்கும். வெளிநாடு போய் விட்டால். யாரும் எதுவும் சொல்ல முடியாது என்று கணக்கு போட்டு அந்த நடிகை துபாய் பறந்து விட்டாராம்.