சினிமா
கிசுகிசு

மீண்டும் பழையபடி ஆரம்பித்த நடிகர் - புலம்பும் தயாரிப்பாளர்

Published On 2020-03-04 16:07 GMT   |   Update On 2020-03-04 16:07 GMT
ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்துக்கொண்டிருந்த நடிகர், மீண்டும் படப்பிடிப்பு பழையபடி தாமதமாக வருவதால் தயாரிப்பாளர் புலம்புகிறாராம்.
படப்பிடிப்புக்கு ஒழுங்காக வர மாட்டார் என்ற சர்ச்சைக்குரிய நடிகர் இப்போது, ஒரு மூன்றெழுத்து படத்தில் நடித்து வருகிறாராம். படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து 16 நாட்கள் வரை மிக சரியான நேரத்துக்கு வந்த அவருடைய அக்கறையை பார்த்து தயாரிப்பாளர் வியந்து போனாராம். “இந்த பையனை பார்த்து இப்படி தவறான தகவலை பரப்புகிறார்களே...” என்று வருத்தப்பட்டாராம்.

16-வது நாளில், நடிகர் மிக காலதாமதமாக படப்பிடிப்புக்கு வந்தாராம். அதோடு தனக்கு 2 கேரவன் வேண்டும். அதை பக்கத்தில் பக்கத்தில் நிறுத்த வேண்டும். எப்ப லீவு கேட்டாலும் கொடுத்துடணும். அப்பதான் படப்பிடிப்புக்கு வருவேன்” என்று நிபந்தனைகளையும் விதித்தாராம். இதை கேட்ட தயாரிப்பாளருக்கு தலை சுற்றி விட்டதாம்!
Tags:    

Similar News