சினிமா
கிசுகிசு

நடிகைக்கு கதை சொல்ல தயங்கும் இயக்குனர்கள்

Published On 2020-03-02 16:22 GMT   |   Update On 2020-03-02 16:22 GMT
தென்னிந்திய திரையுலகில் பிசியாக நடித்து வரும் அக்கட தேசத்து நடிகைக்கு கதை சொல்ல இயக்குனர்கள் தயங்குகிறார்களாம்.
அக்கட தேசத்து இயக்குனரின் மகள், அடுத்தடுத்து வெற்றிபடங்களை கொடுத்து முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளாராம். குறிப்பாக இவர் சமீபத்தில் நடித்த பயோபிக் படத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்ததாம். இதற்கு பின் அந்த நடிகையின் கதை தேர்வே மாறியுள்ளதாம்.

அழுத்தமான, கனமான கதாபாத்திரங்களில் நடிக்கும் தொனியில் கடந்த மூன்று மாதங்களில் 30 கதைகள் கேட்டுள்ளாராம் அந்த நடிகை. ஆனால், ‘அதில் ஒரு கதை கூட என்னை இம்ப்ரஸ் பண்ணவில்லை....’ என்று தட்டிக்கழித்து விட்டாராம். அதனால், அந்த நடிகைக்காக புது ஸ்கிரிப்ட் எழுத ஐடியாவும் இல்லை, எனர்ஜியும் இல்லை என்று இயக்குனர்கள் தெறித்தோடுகிறார்களாம்.
Tags:    

Similar News