சினிமா
கிசுகிசு

படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் நடிகை

Published On 2020-02-29 13:41 GMT   |   Update On 2020-02-29 13:41 GMT
முன்னணி நடிகையாக வலம் வருபவர், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் இனிப்பு கடை நடிகை பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்தார்களாம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நடிகை மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

விபத்து நடந்த பின்பு வீட்டிற்கு சென்ற அவர் அதன்பிறகு வீட்டை வெளியே எங்கும் செல்லவில்லையாம். இந்த அதிர்ச்சியில் இருந்து நடிகை மீள முடியாமல் தவிப்பதால் படப்பிடிப்பிற்கு என்னால் வரமுடியாது என்று கூறியிருக்கிறாராம். மேலும் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறிவருகிறாராம். 
Tags:    

Similar News