சினிமா
கிசுகிசு

சபதம் எடுத்த நடிகை - கண்டுக்கொள்ளாத இயக்குனர்கள்

Published On 2020-02-24 17:10 GMT   |   Update On 2020-02-24 17:10 GMT
மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்த நடிகை, புதியதாக எடுத்த சபதத்தை இயக்குனர்கள் யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்.
மலையாளத்தில் வெளியான காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தமிழில் ஒல்லி நடிகருடன் கொடி பிடித்து நடித்தாராம். அதன்பின் நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், ஒன்றும் கிடைக்க வில்லையாம். இதனால் தெலுங்கு பக்கம் போன நடிகைக்கு ஒரு படத்தை தவிர வேறு பட வாய்ப்பு கிடைக்க வில்லையாம்.

தற்போது தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். மேலும் இனிமேல் தமிழில்தான் கவனம் செலுத்த போறேன் என்று சபதம் எடுத்து பல இயக்குனர்களுக்கு தூது அனுப்பி இருக்கிறாராம். ஆனால், இயக்குனர்களோ நடிகையை கண்டுக்கொள்ள வில்லையாம்.
Tags:    

Similar News