சினிமா
காதலிக்காக இப்படியெல்லாம் செய்வாரா இயக்குனர்
இயக்குனர் ஒருவர் தன்னுடைய காதலிக்காக செய்திருக்கும் காரியம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறதாம்.
நம்பர் ஒன் நடிகையும் ரவுடி இயக்குனரும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நடிகை தற்போது ஒரு படத்திற்காக விரதம் இருந்து வருகிறாராம். இதற்காக பல கோயில்களுக்கு சென்று வழிபட்டும் வந்தார்களாம். இந்நிலையில், இயக்குனர் தன்னுடைய காதலிக்காக வேண்டி சாமிக்கு மாலை போட்டிருக்கிறாராம்.
ஏற்கனவே காதலிக்காக படங்களை இயக்காமல் அவருடனே படப்பிடிப்பு சென்று வரும் இயக்குனர், தற்போது நடிகை நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விரதம் இருந்து மாலை போட்டியிருப்பது, பலரும் காதலிக்காக இப்படியெல்லாம் செய்வாரா இயக்குனர் என்று பேசி வருகிறார்களாம்.