சினிமா
கிசுகிசு

நடிகைக்கு நிபந்தனை விதித்த கணவர்

Published On 2019-09-26 09:22 GMT   |   Update On 2019-09-26 09:22 GMT
திருமணத்துக்கு பின்பும் நடித்துவரும் பிரபல நடிகைக்கு அவரது கணவர் சில நிபந்தனைகள் விதித்து இருக்கிறாராம்.
‘பல்லாவரம் நடிகை’ திருமணத்துக்கு பின்பும் கணவரின் அனுமதியுடன் நடித்து வருகிறாராம். விஷயம் அதுபற்றி அல்ல, படத்துக்கு படம் அவர் கவர்ச்சி உடை அணிகிறாராம். பிரபல கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடித்து வருகிறாராம். இதுபற்றி அவருடைய கணவரிடம் சில ஆந்திர ஆசாமிகள் போட்டுக் கொடுத்து இருக்கிறார்களாம்.

அதைத்தொடர்ந்து அந்த நட்சத்திர கணவர் தனது மனைவிக்கு 2 கட்டளைகள் விதித்து இருக்கிறாராம். அதில் ஒன்று, “இனிமேல் கவர்ச்சியாக நடிக்க கூடாது. கவர்ச்சி உடையணிந்து வெளிநிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது. இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டால், தொடர்ந்து நடிக்கலாம்” என்று கூறியிருக்கிறாராம். வேறு வழியில்லாமல், கணவரின் நிபந்தனைகளுக்கு ‘பல்லாவரம் நடிகை’ பணிந்து இருக்கிறாராம்!
Tags:    

Similar News