சினிமா
சிக்கலில் உள்ள படம் குறித்து பேச மறுக்கும் ஹீரோ
பல வருடங்களாக ரிலீசாகாமல் தள்ளிப் போகும் படம் குறித்து படத்தின் ஹீரோ பேச மறுக்கிறாராம்.
பல வருடங்களாக ரிலீஸாகும் என எதிர்பார்கப்பட்ட ஸ்டைலிஷ் இயக்குனரின் திரைப்படம், தேதி குறித்த பிறகும் தள்ளிப் போயிருக்கிறதாம். இந்த நிலையில் படத்தின் ஹீரோ, படம் தள்ளிப்போவது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். காரணம், அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் முழுமையாக வந்து சேராதது தான் என்கிறார்களாம்.
ஹீரோ கொஞ்சமாவது ஆதரவு கொடுத்திருந்தால் படம் ரிலீஸாகியிருக்கும் என்று இயக்குனர் தரப்பில் சொல்கிறார்களாம். அந்த ஹீரோ பட விழா ஒன்றில் பேசும்போது, சிலர் சம்பளம் தராமல் ஏமாற்றுவதாக கூறியிருந்தாராம். இது கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தியதாம்.