சினிமா
கிசுகிசு

தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை

Published On 2019-08-21 09:29 GMT   |   Update On 2019-08-21 09:29 GMT
சம்பள பாக்கி தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினரை நடிகை மிரட்டியுள்ளாராம்.
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்று சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளாதாம். இதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போட்டியாளர் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றது தானாம். இது நடந்து ஒருவாரம் ஆகியும் அதன் மீதான தாக்கம் குறைந்தபாடில்லை.

தற்போது அந்த நடிகை, சம்பள பாக்கியை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினரை மிரட்டியுள்ளாராம். இதனையடுத்து அந்த நடிகை மீது தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்களாம். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதாம்.
Tags:    

Similar News