சினிமா செய்திகள்
null

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் இணைந்த திரிஷா

Published On 2024-02-05 06:41 GMT   |   Update On 2024-02-05 11:51 GMT
  • நடிகர் சிரஞ்சீவி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
  • இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.


இதைத்தொடர்ந்து சிரஞ்சீவின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்திற்கு 'விஸ்வம்பரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.



இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விஸ்வம்பரா' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை திரிஷா இணைந்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2006-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News