சினிமா செய்திகள்

 எஸ்.ஏ.சந்திரசேகர்

ஆரணி ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம்

Published On 2023-03-05 05:32 GMT   |   Update On 2023-03-05 05:32 GMT
  • ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம் செய்தார்.
  • கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றுபாலம் அருகில் உள்ள ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷம் நடந்தது. இதில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது.


ஆரணியில் சாமி தரிசனம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர் வந்த தகவல் ஆரணி முழுவதும் பரவியதால் விஜய் ரசிகர்கள் கோவில் வளாகம் முன்பு குவிந்தனர். தரிசனம் முடித்து வெளியே வந்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அரசியலில் நடிகர்கள் தொடர்ச்சியாக பின்னடைவை சந்திக்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து சென்றார்.

Tags:    

Similar News