சினிமா செய்திகள்
null

அஜித்தின் தந்தை உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.. ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

Published On 2023-03-24 06:20 GMT   |   Update On 2023-03-24 06:39 GMT
  • அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
  • அஜித்தின் தந்தை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News