சினிமா செய்திகள்

பிரியாமணி

சி.பி.ஐ. அதிகாரியாக களமிறங்கிய பிரியாமணி

Published On 2022-10-18 13:18 GMT   |   Update On 2022-10-18 13:18 GMT
  • இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் பிரியாமணி நடிக்கும் படம் 'டி.ஆர்.56’.
  • இப்படம் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்னர் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் வர அங்கு அதிக கவனம் செலுத்தினார். தற்போது இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் 'டி.ஆர்.56' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.


டி.ஆர்.56

இதில், பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு 'சார்லி 777' படத்திற்கு இசையமைத்த நோபின் பால் இசையமைக்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா கூறியதாவது, "இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவிவரும் உண்மைச் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம்.


டி.ஆர்.56

பிரியாமணி சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதையை சொல்லும்போதே பிரியாமணி மிகவும் பிரம்மிப்பானார். நேர்த்தியான சி.பி.சி. அதிகாரியாக நடிக்க தன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார். படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். பிரியாமணி தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது" என்று கூறினார்.


டி.ஆர்.56

'டி.ஆர்.56' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9-ஆம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News