சினிமா செய்திகள்

செல்வராகவன்

துணை என்பது கானல் நீர்.. நெருங்க நெருங்க தூரம் ஓடும்.. இயக்குனர் செல்வராகவன் பதிவு

Published On 2022-12-27 18:44 IST   |   Update On 2022-12-27 18:44:00 IST
  • இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் தற்போது ‘பகாசூரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
  • செல்வராகவன் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.


செல்வராகவன்

மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்" என தத்துவமாக பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Tags:    

Similar News