சினிமா செய்திகள்

கமல்ஹாசன்

அவரது களத்திலேயே நான் நீந்தக் காரணமானவர் - நடிகர் கமல்ஹாசன்

Published On 2022-12-24 15:38 IST   |   Update On 2022-12-24 15:38:00 IST
  • எம்ஜிஆரின் 35 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
  • கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எம்.ஜி.ஆர். குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அ.தி. மு.க. நிறுவனர் முன்னாள் முதல் - அமைச்சர் எம்ஜிஆரின் 35 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.


எம்.ஜி.ஆர்

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ம் "மேடையில் மாணவராகத் தொடங்கி திரையில் வாத்தியார் ஆனவர். இணையற்ற தலைவராக இன்றுவரை மக்களின் மனதில் நிலைத்திருப்பவர், ஆனந்தஜோதி படத்துக்காக எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, இன்று அவரது களத்திலேயே நான் நீந்தக் காரணமானவர் எங்கள் எம்ஜிஆர். நினைவுநாளில் வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News