சினிமா செய்திகள்

வரும் 14ம் தேதி அடையாள வேலை நிறுத்தம்- ஆர்.கே.செல்வமணி

Published On 2025-05-08 19:09 IST   |   Update On 2025-05-08 19:29:00 IST
  • தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம்.
  • 55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை வடபழநியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம்.

55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

வரும் 14ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த ஃபெப்சி முடிவு செய்துள்ளது.

தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளிகள் சிலர் அழிக்க முயற்சிக்கும் கொடுமைக்கு எதிராக வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று படப்பிடிப்புகள், Post Production, pre production உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News