சினிமா செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்து வெளியான அப்டேட்

Published On 2025-11-20 10:48 IST   |   Update On 2025-11-20 10:48:00 IST
  • தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
  • பிரதீப் ரங்கநாதனிடமிருந்து மற்றொரு இளமை, காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதனை தொடர்ந்து தானே இயக்கி நடித்த 'லவ் டுடே' படம் பெறும் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து பிரதீப் ரங்கநாதனுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து 'டிராகன்', 'டியூட்' படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய படம் தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதனிடமிருந்து மற்றொரு இளமை, காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News