சினிமா செய்திகள்

மெட்ரோ, கோடியில் ஒருவன் இயக்குநரின் அடுத்த படைப்பு - வெளியான அறிவிப்பு

Published On 2024-05-23 15:41 GMT   |   Update On 2024-05-23 15:41 GMT
  • இந்த படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ், யோகி பாபு நடிக்கின்றனர்.
  • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

அந்த வகையில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை (மே 24) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 


ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் 2024 ஆண்டிலேயே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News