சினிமா செய்திகள்

'ஏஞ்சல்' படப்பிடிப்பு 20 சதவீதம் நிலுவை- உதயநிதி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-02-17 19:08 IST   |   Update On 2025-02-17 19:08:00 IST
  • தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது.
  • படத்தின் தயாரிப்பாளர் சென்னை ஐகோர்ட்டில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது ஏஞ்சல் என்கிற படம் ஒன்றில் நடித்தார்.

ஏஞ்சல் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கினார். இப்படத்தை ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் தயாரித்தார்.

இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, 80 சதவீதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது.

ஏஞ்சல் படப்பிடிப்பு 20 சதவீதம் நிலுவையில் இருக்கும் போது, 'மாமன்னன்' படம்தான் தனக்கு கடைசி படம் என்றும் நடிப்பில் இருந்து விலகுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துவிட்டார். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு சென்று விட்டார். இதனால் ஏஞ்சல் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சென்னை ஐகோர்ட்டில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அதில், 'ஏஞ்சல்' படத்தை முடித்து கொடுக்காததால் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க கோரி தயாரிப்பாளர் ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதிலளிக்க வேண்டும்" என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விசாரணை மார்ச் 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News