நான் கொஞ்சம் பூமரா ஆகிட்டேனானு தெரியல - இயக்குநர் S.U. அருண்குமார்
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.
திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் 37 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனர் அருண்குமார் பங்கேற்றார். அப்பொழுது திரையரங்கில் மொபைல் யூஸ் செய்வர்களைப் பற்றிய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் " திரையரங்கில் மொபைலை எடுத்து ஃபோட்டோ எடுப்பவரை பார்த்தால் கோவமாக வரும். "திரையரங்கில் படம் ஆரம்பித்த பிறகு, படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது, ஸ்டேடஸ் வைப்பது, இடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, படம் ஆரம்பித்த பிறகு டார்ச் அடித்துக் கொண்டு சீட்டை தேடுவது போன்ற செயல்கள் அதிருப்தி அளிக்கிறது. மக்கள் படத்தை உன்னிப்பாக கவனித்தால்தான் கதையோட்டம் புரியும், இதுபோன்ற இடையூறுகள் காட்சிகளின் ரசனையை குறைக்கும்" என தெரிவித்துள்ளார்.