சினிமா செய்திகள்

தொடங்கியது 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு- புகைப்படங்களை பகிர்ந்த மோகன்லால்

Published On 2025-09-22 15:15 IST   |   Update On 2025-09-22 15:15:00 IST
  • இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன.
  • படப்பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் 'திரிஷ்யம்'. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 2021-ம் ஆண்டு 'திரிஷ்யம்'படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து இந்தப் படத்தின் 3-வது பாகம் உருவாகும் என இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இப்படம் தொடர்பான அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், 'திரிஷ்யம் 3'ம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. கொச்சியில் நடைபெற்ற படப்பூஜையில் நடிகர் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். படப்பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனிடையே, நாளை நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

Similar News