சினிமா செய்திகள்

விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்.. கங்குவா ரிலீசில் டுவிஸ்ட்!

Published On 2024-11-07 15:31 IST   |   Update On 2024-11-07 15:31:00 IST
  • ரிலையன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
  • பாக்கி தொகை நாளை வழங்கப்படும் என்று உறுதி.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கங்குவா." ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த வாரம் உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இதையடுத்து, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் கங்குவா படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கங்குவா படத்தை தயாரித்து இருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்க வாங்கிய ரூ. 99 கோடியே 22 லட்சம் கடனில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, வாங்கிய பணத்தை கொடுக்காமல் கங்குவா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று ரிலையன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை நாளை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இதையடுத்து, வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார். கங்குவா திரைப்படம் ஏற்கனவே ரிலீசாக இருந்த நிலையில், ரஜினியின் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆனதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேதியில் கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என்பது நாளை தெரிந்து விடும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News