சினிமா செய்திகள்
null

இடுப்பை கிள்ளியதால்... அதிரடி முடிவு எடுத்த போஜ்புரி நடிகை

Published On 2025-09-01 13:31 IST   |   Update On 2025-09-01 13:50:00 IST
அருகே நின்று கொண்டிருந்த நடிகர் பவன்சிங், திடீரென அவரது இடுப்பை கிள்ளினார்.

போஜ்புரி சினிமாவின் முன்னணி நடிகையான அஞ்சலி ராகவ், லக்னோவில் நடந்த ஒரு பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, அருகே நின்று கொண்டிருந்த நடிகர் பவன்சிங், திடீரென அவரது இடுப்பை கிள்ளினார்.

அஞ்சலியும் சிரித்தபடி சமாளித்தார். பொதுமேடையிலேயே நடிகையின் இடுப்பை கிள்ளிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இடுப்பை தொடும் நடிகரிடம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அஞ்சலி சிரிக்கிறாரே... அவரும் இதை ரசித்து அனுபவிக்கிறாரோ, என்னவோ... என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆவேசமடைந்த அஞ்சலி, ''இதை எப்படி ரசிப்பேன் என்று நினைக்கலாம். என் இடுப்பில் ஏதோ இருக்கிறது? என்று கூறியபடி பவன்சிங் தொட்டார். எனக்கு அதிர்ச்சி இருந்தாலும் மேடை என்பதால் காட்டிக்கொள்ளவில்லை. எந்த பெண்ணையும் அனுமதியின்றி தொடுவது தவறு. நான் அதை அனுமதிப்பதும் கிடையாது. இனி போஜ்புரி படங்களில் நான் பணியாற்ற போவதில்லை'', என்று அறிவித்தார்.

இதற்கிடையில் தனது செயல்பாடு குறித்து மன்னிப்பு கேட்டிருக்கும் நடிகர் பவன்சிங், படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை வாபஸ் பெறுமாறும் அஞ்சலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News