பைசனுக்கு முன்பும் பின்பும்... பரியேறும் பெருமாளில் நடிக்க முடியாதது குறித்து பேசிய அனுபமா
- பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு நான் மாரி செல்வராஜ் சாரின் fan ஆக மாறிவிட்டேன்.
- பைசனுக்கு முந்தைய அனுபமா வேற.. பைசனுக்கு பிறகான அனுபமா வேற
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், "பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க ரஞ்சித் சார் எனக்கு கால் செய்தார். அந்த சமயத்தில் நான் மாரி செல்வராஜ் சாரிடம் நான் பேசினேன். அனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்னுடைய துரதிஷ்டம். அதற்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு நான் மாரி செல்வராஜ் சாரின் fan ஆக மாறிவிட்டேன். அதன்பிறகு நீங்கள் என்னை படத்தில் நடிக்க கூப்பிடுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பைசன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது.
பைசனுக்கு முந்தைய அனுபமா வேற.. பைசனுக்கு பிறகான அனுபமா வேற... ஒரு நடிகராக வித்தியாசமான கண்ணோட்டத்தை மாரி செல்வராஜ் சார் எனக்கு கொடுத்தார்.