சினிமா செய்திகள்

காதலியை பார்க்க 3500 கி.மீ. பயணித்த நடிகர் ஜி.எம்.குமார்

Published On 2024-03-06 11:23 GMT   |   Update On 2024-03-06 11:23 GMT
  • சென்னை, பெங்களூரு, கோவா வழியாக மும்பை சென்று அதன் பின் சென்னை திரும்பினார்
  • முதல் படத்தில் நடித்த பல்லவியை அப்போது அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்

சென்னையை சேர்ந்தவர் நடிகர் ஜி.எம்.குமார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தோற்றம் கொண்டவர். 1986-ல் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் என்ற படத்தில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து பிட் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற பல படங்களை இயக்கினார். 1993-ல் 'கேப்டன் மகள்' என்ற படம் மூலம் நடிகரானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார். மேலும் கொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

பல படங்களை தயாரித்து இயக்கியதால் அதில் தோல்வி ஏற்பட்டு நஷ்டம் அடைந்தார். அதனால் சில வருடம் சினிமா பக்கம் செல்லாமல் இருந்தார். அதன்பின் 'வெயில்' படம் இவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தியது. முதல் படத்தில் நடித்த நடிகை பல்லவியை அப்போது அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜி.எம்.குமார் 'எக்ஸ்' இணைய தளத்தில் 'எனது முன்னாள் காதலியை பார்க்க 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் கார் ஓட்டிச் சென்றேன். சென்னை, பெங்களூரு, கோவா மும்பை அதன் பின் சென்னை' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.இது குறித்து இணைய தளத்தில் நெட்டிசன்கள் பலர் பலவித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News