சினிமா
ரம்யா பாண்டியன்

காவலர்களுடன் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ரம்யா பாண்டியன்

Published On 2021-04-22 09:38 GMT   |   Update On 2021-04-22 09:38 GMT
சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கின் நினைவாக நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ரம்யா பாண்டியன், மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர் விவேக். அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



நேற்று சிம்புவின் மாநாடு படக்குழுவினர் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன், விவேக் மறைவையொட்டி அவர் நினைவாக 59 (விவேக் வயது) மர கன்றுகளை திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில்  மாவட்ட SP. அரவிந்தன் மற்றும் காவலர்களும் நட்டு சிறப்புரை ஆற்றினார்.


Tags:    

Similar News