சினிமா
தலைவி படத்தில் கங்கனா

கொரோனா 2வது அலை எதிரொலி - கங்கனாவிற்கு வந்த பிரச்சனை

Published On 2021-04-09 13:41 GMT   |   Update On 2021-04-09 16:12 GMT
கொரோனா வைரஸின் 2வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. தளர்வுகள் அறிவித்ததால் இந்த ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.



தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், திரையரங்குகளில் 50 % இருக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைவி படக்குழுவினர் ஏப்ரல் 23ம் தேதி திரைப்படம் வெளியாகவில்லை என்று அறிவித்து இருக்கிறார்கள். கொரோனா பாதிப்புகள் குறைந்த பிறகு மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News