சினிமா
ராதிகா சரத்குமார்

எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை - ராதிகா சரத்குமார்

Published On 2021-04-09 11:27 GMT   |   Update On 2021-04-09 11:27 GMT
பிரபல நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா இரண்டு நாட்களாக எந்த பதிவும் செய்யாததால், கொரோனா தான் காரணம் என்று ரசிகர்களும், ராதிகா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் பதிவு செய்து வந்தார்கள்.



இந்நிலையில் ராதிகா இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், அனைவரின் அன்புக்கும் நன்றி. எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உடம்பு வலி மட்டுமே. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன. நாங்கள் மேல் நீதிமன்றங்களில் முறையிடுவோம். நான் வேலைக்கு திரும்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News